'இருக்கிறம்'

சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையாக இருக்கிறம் மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் சஞ்சிகையை மாதமிருமுறை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதங்கள், பொருளாதாரத் தடைகள் என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் இருக்கிறம் வெளிவந்துகொண்டிருந்ததை யாவரும் அறிவர். அதிகரித்து வரும் செலவீனங்கள், விநியோகத்திலுள்ள ஆட்பல பற்றாக்குறை, சந்தைப்படுத்தலிலுள்ள குறைபாடுகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கிறம் சிக்கித் திணறத்தொடங்கியதால் ஜனவரி மாதம் 64 ஆவது இதழுடன் தனது பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. எனினும் இச்சஞ்சிகைக்காக இரவுபகல் கண்விழித்து அயராது பாடுபட்டுவரும் துடிப்புமிக்க இதழியல் துறைசார்ந்த இளைஞர் குழுவினருடன் பணியாற்றும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மீண்டும் இருக்கிறம் சஞ்சிகையை கொண்டுவர பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். மனதில் துணிவும், நம்பிக்கையும், ஆதரவளிக்கும் வாசகர்களும் இருக்கிறமுடன் கூடவே இருந்ததால் மீண்டும் இருக்கிறம் தனது பயணத்தை வார இதழாக ஆரம்பித்து இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது என்பது எந்தளவுக்கு சவாலானது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடிய சஞ்சிகைகளின் போட்டியைச் சமாளிக்க வேண்டும். அந்தளவு தூரத்திற்கு அதற்கான விடயப்பரப்போ, அச்சுத் தரமோ, வாசகர்களின் ஆதரவோ இலங்கையில் இல்லை. அதனால்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் நின்று போன சஞ்சிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பற்றி எரியும் அன்றாடப் பிரச்சினைகள், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டு நிற்கும் சிக்கல்கள் போன்றவற்றையே பெரும்பாலும் உள்ளடக்கங்களின் பிரதான கருப்பொருளாகக் கொண்டு ~இருக்கிறம்’ வெளியாவதால் அது தமிழ் பேசும் மக்களின் உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக நிற்கின்றது என்பது வெள்ளிடைமலை. ஏனைய சஞ்சிகைகள் இலக்கியத்தை முதற் பொருளாகப் பேச, ‘இருக்கிறம்| வெகுசன வாசிப்புக்குத் தீனிபோடும் பல்துறை சார்ந்த இதழாகத் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது. இலக்கியத் தரப்பை மட்டுமல்லாமல், சகலரையும் வாசிக்க வைக்கவேண்டுமென்பதே இதன் நோக்கம். ஆரோக்கியமான வாசிப்பு அனுபவத்தைத் தருவதுதான் ‘இருக்கிறம்’ பெற்றுள்ள வெற்றிக்குப் பிரதான காரணம். இவற்றுக்கும் மேலாக சமூக அவலங்களை பிரதேச மண்வாசனையோடு நகைச்சுவையாகத் தருவதில் ‘இருக்கிறம்’ ஒரு தனித்துவத்தைப் பெற்றிருக்கின்றது. கருத்தைக் கவரும் லாவகமான எழுத்து நடை, காத்திரமான கட்டுரைகள், நேர்த்தியான அச்சு, ஒழுங்கமைப்பான பக்க வடிவமைப்பு, கவர்ச்சியான கட்டமைப்பு, வண்ணப் பிரதிபலிப்பு, இதுவே “இருக்கிறம்”. அதென்ன “இருக்கிறம்” என்று இன்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். யுத்த அழிவுகளில் சிக்கி, ஆக்கிரமிப்பு, அழுத்தங்களில் துவண்டு, வாழ்வியல் சோகங்களில் மூழ்கி நலிவுற்றிருக்கும் எமது தமிழ்பேசும் மக்களையோ அல்லது புலம்பெயர் தமிழர்களையோ பார்த்து “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “இருக்கிறம்” என விரக்தியாகப் பதில் சொல்வார்கள். ஆனால் நாங்களும் “இருக்கிறம்” என்ற அடையாளத்தோடு உயிர்த்துடிப்புள்ள சஞ்சிகையாக இருக்கிறம் நான்கு ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ‘ஏதோ இருக்கிறம்’, ‘எப்படியோ இருக்கிறம்’, ‘சும்மா இருக்கிறம்’, என்பவர்களுக்கிடையில் ‘இருக்கின்றவர்களுக்காய் இருக்கிறம்’ என்ற தற்துணிவுடன் இருக்கிறம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. உலகில் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளோ நூல்களோ பெயர்ச்சொல்லில்தான் தமக்குரிய பெயரை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்காய் வினைச்சொல்லிலே இருக்கிறம் தனது பெயரை வகுத்துக் கொண்டது. ஏனெனில் இன்று நாமெல்லாம் வினைகளாகத்தானே இருக்கிறோம். இருக்கிறமின் மகுட வாக்கியம் “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்ற யோகர் சுவாமிகளின் கூற்று. ‘ஒரு பொல்லாப்புமில்லை, எப்பவோ முடிந்த காரியம்..” என்றார் அந்த தேரடிச் சித்தர். உண்மைதான் ‘ஒரு பொல்லாப்பும் இல்லை| என்பதோடு, ‘இருக்கிறம்| தனது செயற்பாடுகளை வரையறுத்துக் கொள்ளாது எமது எதிர்காலம் குறித்து அறிவார்ந்த ஆய்வு முறைகளுக்கும் இடம் தருகின்றது. ஈழத்தமிழ்ச் சமூகம் தனது கலைந்து போன கனவுகளை நனவாக்குவதற்கு இந்த அணுகுமுறை அவசியமானதால் அதை நோக்கிய இருக்கிறமின் பயணம் மிகவும் துணிச்சலானது. ‘இருக்கிறம்’ என்ற சின்னத்தில் இரண்டு காகங்கள் ஏன் எதிரும்புதிருமாக ஒன்றையொன்று பார்த்தவண்ணம் உட்கார்ந்திருக்கின்றன? காகத்தை விட வேறு பறவைகள் சின்னங்களாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். எங்களுடைய நாட்டில் காகம்தான் எங்கும் காணப்படும் பறவை. சாதாரண பொது சனங்களை அது அடையாளப்படுத்துகிறது. காகம் எமது வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புபட்டது. ஒரு இரையைக் கண்டால் தான் மட்டும் உண்ணாது தனது சகாக்களையும் அழைத்து பகுத்துண்ணும் பழக்கம் கொண்டது. சைவசமயத்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கும் போது உணவின் சிறுபகுதியை முதல் காகத்திற்கு வைத்தபின்னரே உண்ணத் தொடங்குவார்கள். இவை அனைத்தும் இன்று எமது சமூகத்திற்குத் தேவை. பண்பாடு, பழக்கவழக்கம் இரண்டும் இன்று ஐந்தறிவு ஜீவனாகிய காகத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தியலின் அடிப்படையிலே காகம் இருக்கிறமின் சின்னமாகியது. பத்திரிகை உலகில் 80 வருடகால அனுபவத்தைக் கொண்ட வீரகேசரியின் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டுடன் ‘இருக்கிறம்’ சஞ்சிகை இன்று கைகோர்த்திருக்கின்றது. ‘இருக்கிறம்’ சஞ்சிகையின் பதிப்புரிமை மற்றும் விநியோக, விளம்பரப் பணிகளை வீரகேசரி நிறுவனம் பொறுப்பேற்றிருக்கிறது. இதுவரை மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த ‘இருக்கிறம்’ எதிர்வரும் ஏப்ரல் 4 முதல் வார இதழாக வீரகேசரி வெளியீட்டகத்தின் கீழ் வெளிவர இருப்பது வாசக நெஞ்சங்களின் அறிவுப்பசிக்கு தீனிபோடுவதாய் இருக்கும். இலங்கைத் தமிழ் சஞ்சிகை வரலாற்றிலே இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம். எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் புதியபாதையில் பயணிக்கவிருக்கும் ‘இருக்கிறம்’ சஞ்சிகைக்கு வீரகேசரி சரியான ஒரு அடித்தளத்தையிட்டிருக்கிறது. வீரகேசரியின் ஆதரவுக்கு எமது நன்றிகள். வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ள சமூகமாக தமிழ்பேசும் மக்கள் இருப்பது இன்று பெரும் குறையாக இருக்கின்றது. இந்நிலையில் இவர்களை வாசிக்கத் தூண்டுவது ஒரு சஞ்சிகையின் பெரும் பணியாக இருக்கிறது. இலக்கியச் சிற்றேடுகள், ஜனரஞ்சக இதழ்கள் என்று வேறு திசைகளில் பயணித்த காலம் கரைந்து கொண்டு போகிறது. உயிர்மை, அம்ருதா, தீராநதி போன்றவை வாசகர்களுக்கு சீரியசான விடயங்களையும் எளிமையாகக் கொடுத்து வருகின்றன. ஆனால் ‘இருக்கிறம்’ அவற்றின் வழியில் கூடப் பயணிக்காது தனிவழியே செல்வது குறிப்பிடத்தக்கது. இன்று எமது மக்களைப் பொறுத்தவரையில் மாற்றம்தான் ஒரு முடிவாக இருக்கின்றது. மாற்றுக் கருத்துக்களும் மாற்றுச்சிந்தனைகளும் இன்று தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில் அதற்கான சமூக சஞ்சிகையாக இருக்கிறமின் எழுச்சி எதிர்காலத்தில் வாசகர்கள் மத்தியில் புதிய திசையொன்றைச் சுட்டிக்காட்டி நிற்கும் என்பது திண்ணம்.

Tuesday, March 29, 2011

இருக்கின்ற எல்லோருக்காகவும் தொடர்ந்து இருப்பம்!!

லங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சஞ்சி கை ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது என்பது எந்தளவுக்கு சவாலானது என்பது அனை வருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடிய சஞ்சிகைகளின் போட்டியைச் சமாளிக்க வேண்டும். அந்தளவு தூரத்திற்கு அதற் கான கருப்பொருளோ. அச்சுத்தரமோ, வாசகர் களின் ஆதரவோ இலங்கையில் இல்லை. அதனால் தான் இலங்கையைப் பொறுத்தவரையில் நின்று போன சஞ்சிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இலக்கியத்தைப் பிரதான பொருளாகக் கொண்டுள்ள சிறுசஞ்சிகைகள் மட்டும்தான் இலங் கையில் தமது இருப்பை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் நிலையில், பல்சுவைகளையும் கொண்டு ஒரு சமூக சஞ்சிகையாக தமிழக சஞ்சி கைகளுக்கு நிகராக கடந்த மூன்று வருடகாலமாக இருக்கிறம் வெளிவந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே!

மக்கள் உண்மையாகப் பங்கேற்கும் ஜனநாயகக் கட்டமைப்பானது, ஒரு சமூகத்தின் விழுமியங்கள் மற்றும் கண்ணோட்டங்களை மாற்றினாலேயன்றி உருவாக முடியாது. இதனால், ஒரு நீண்ட கால நோக்கில், பரந்துபட்ட மக்களுடன் உரையாடும் ஒரு ஊடகமாக, சமூகத்தின் கருத்துருவாக்கத்தினை ஏதுவாக்கும் முற்போக்கான விழுமியங்களை விதைக்கும் கருவியாக “இருக்கிறம்” சஞ்சிகை 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இதன்படி, மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவதுடன் வித்தியாசமான மக்கள் குழுமங்களின் மற்றும் சமூகங்களின் குரல்களைப் பிரதிபலித்தும் ஊடகமாகவும் இருக்கிறம் இருந்து வருகின்றது. எமது பாரம்பரிய விழுமியங்களை எங்கு கேள்வியெழுப்ப வேண்டுமோ அங்கு துணிந்து கேள்விக்குட்படுத்துகிறது. மக்களைப் பொறுப்பு மிகுந்த பிரஜைகளாக மாற்றும் கடமையை அது தவறாது செய்தும் வருகின்றது. மக்கள் தொடர்ந்து ஆதரிக்கும் தங்குதிறன் மிக்க சஞ்சிகையாக இருக்கவேண்டுமென்பதற்காக பொழுதுபோக்கு அம்சங்கள் சேர்ந்திருந்தாலும் அந்த அம்சங்கள் கூட சஞ்சிகையின் கொள்கைகளை அடியொற்றி அமைக்கப்பட்டு இருப்பது இருக்கிறமின் தனிச்சிறப்பு ஆகும்.

புதிய மாற்றத்தை நோக்கியும் இளைஞர்களிடையே சமூகசேவையையும், புதிய சிந்தனை மாற்றத்தையும் தோற்றுவிக்கவேண்டுமென்ற குறிக்கோளுடன் இருக்கிறம் இன்று 64 இதழ்களாக வெளிவந்து இலங்கையில் நீண்டகாலமாக (4வருடங்களாக) வெளிவரும் ஒரே ஒரு மக்கள் எழுச்சிமிக்க சஞ்சிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறது. இலங்கையில் இன்று வெளிவந்து கொண்டிருக்கும் 25க்கும் மேற்பட்ட சஞ்சிகைகளுக்கு மத்தியில், இலகுவான எவரையும் கவர்ந்திழுக்கும் தமிழ் நடையையும். வித்தியாசமான எழுத்துருவாக்க நடையையும், கொண்டு வெளிவருவது இருக்கிறமின் சிறப்பியல்பு.

தென்னிந்திய சொற்பிரயோகங்களும் எழுத்து நடையும் இலங்கை ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற இக்கால கட்டத்தில் தனக்கேயுரிய தனிப்பாணியுடன் ஈழத் தமிழில் சொல்லாக்கங்களைப் பிரயோகிப்பது இருக்கிறமின் தனித்தன்மை. சிறந்த கவர்ச்சிகரமான பக்க வடிவமைப்பு, சொல்லாடல் மிக்க கதைச்சுருக்கம் என்பவையே இருக்கிறமை இன்று மக்கள் மத்தியில் தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகையாக தலைநிமிர்ந்து நிற்க வைத்துள்ளன.
வெளியீட்டிலுள்ள தாமதங்கள், பொருளாதாரத் தடைகள் என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் இருக்கிறம் வெளிவந்துகொண்டிருந்ததை யாவரும் அறிவர். அதிகரித்து வரும் செலவீனங்கள், விநியோகத்திலுள்ள ஆட்பல பற்றாக்குறை, சந்தைப்படுத்தலிலுள்ள குறைபாடுகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கிறம் சிக்கித் திணறத்தொடங்கியதால் கடந்த ஜனவரிமாதத்துடன் 64வது இதழுடன் தனது பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.

எனினும் இச்சஞ்சிகைக்காக இரவுபகல் கண்விழித்து அயராது பாடுபட்டுவரும் துடிப்புமிக்க இதழியல் துறைசார்ந்த இளைஞர் குழுவினருடன் பணியாற்றும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் எழுத் தாளர்களும் மீண்டும் இருக்கிறம் சஞ்சிகையை கொண்டுவர பல முயற்சிகளையும் மேற் கொண்டனர். எனினும் மனதில் துணிவும் நம்பிக்கையும் ஆதரவளிக்கும் வாசகர்களும் இருக்கிற முடன் கூடவே இருந்ததால் மீண்டும் இருக்கிறம் தனது பயணத்தை ஆரம்பிக்கவிருக்கின்றது.

கொழும்பிலுள்ள எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட் நிறுவனத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளையடுத்து இருக்கிறம் சஞ்சிகையை அச்சிட்டு விநியோகிக்கும் பொறுப்பு இந்நிறுவனத்தினரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கைத் தமிழ்சஞ்சிகை வரலாற்றிலே இது ஒரு மைல்கல் என்று சொல்லலாம். எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் புதியபாதையில் பயணிக் கவிருக்கும் இருக்கிறம் சஞ்சிகைக்கு இது சரியான ஒரு அடித்தளத்தையிட்டிருக்கிறது.

Monday, March 28, 2011

“இருக்கிறம்” இதழ் 64

அண்மையில் நாம் சந்தித்த பாரிய வெள்ள அனர்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறமின் 64வது இதழ் வெளி வந்துவிட்டது.

அண்மையில் தமிழினத்திற்குத் தலையிடியாகிப்போன இலங் கையின் தேசிய கீதம் இனி சிங்கள மொழியில் மாத்திரமே இசை க்கப்பட வேண்டும் எனும் அமைச்சரவைத் தீர்மானம் பற்றிய சிற ப்புக் கட்டுரையானது தமிழருக்கெதிரான புதிய அடக்கு முறைகள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன என்பதை புலப்படுத்தி நிற்கி ன்றது.

இன்று வைத்தியசாலைகளில் மற்றும் அதற்காக வேலைசெய்யும் பிற ஊழியர்கள் நோயாளிகள் மீது காட்டும் அக்கறையில்லாத அலட்சியப்போக்கை இவ்விதழின் உண்மையின் பதிவு உதாரணத்துடன் விளக்கியுள்ளது.

இலங்கையில் எழுத்தாளர்களுக்கான இன்னுமொரு மைல் கல் லாக நடந்து முடிந்திருக்கிறது சர்வதேச எழுத்தாளர் மாநாடு. இதைப்பற்றிய ஒரு காத்திரமான விமர்சனம் உள்ளே…

“சடங்குகளும் சம்பிரதாயங்களும் அவசியந்தானா..” என்ற சிந்துஜாவின் கட்டுரையில் இன்றைய நவீன உலகில் இவ்வாறான வழக்கங்கள் மாறவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

“தெய்வ நிந்தனையின் பெயரால் உருவாகும் மதத்தீவிரவாதம்” யாவரும் வாசிக்கவேண்டிய கட்டுரை.

விளையாட்டுப் பிரியர்களுக்கு 'சாதனைகளும் வேதனைகளும்" ஓர் தொகுப்பாகத் தந்திருக்கின்றார் மயூரன்...

நேரிய சிந்தனை எம்மை நெறிப்படுத்தும் எனக்கூறும் வைத்தியர் முருகானந்தன் அவர்களின் மருத்துவக்கட்டுரை விரிவாக உள்ளே....

மேலும் 'வானத்தால் குதிக்கும் வடலிகள்" எனும் சிறுகதையும், 'தலையில்லா முண்டங்கள்" கவிதையும் இன்றைய யதார்த்தத்தைக் காட்டிநிற்கின்றது.

எமது இருப்பை கடத்தல்கள்,கொள்ளைகள் ஒருபக்கமும் இயற்கை அனர்த்தங்கள் மறுபுறமுமாக கேள்விக் குறியாக்கியிருக்கின்றது என்பதை புலப்படுத்தியிருக்கின்றது ஆசிரியரின் இருப்பு...

இன்னும் இளமை புதுமை கலாட்டா கட்டுரைகள் கவிதைகள் அறிவியல் தகவல்கள் தொழிநுட்பம் என அனைத்து அமசங்களையும் தாங்கி வந்திருக்கின்றது இம்மாத இருக்கிறம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

“இருக்கிறம்” இதழ் 63

இருக்கிறமின் 63 ஆவது இதழ் கோர யுத்தத்தின் விம்பங்களைப் பிரதிபலிக்கும் அடையாளங்களைச் சுமந்து, யுத்த அழிவுகளில் இருந்து மீள எத்தனிக்கும் மாங்குளத்தின் புகைப்படத்துடன் வெளிவந்து விட்டது.

இருக்கிறமின் இந்த இருப்பும் வாசகர்களுக்கு விருந்து படைக்க பல்வேறு புதிய அம்சங்களுடன் இருக்கிறது. புனரமைக்கப்பட்டு வரும் இராணுவ முகாம்களும், புதிது புதிதாக முளைக்கும் புத்தவிகாரைகளும் மாறிப்போன மாங்குளத்தைச் சுட்டிக்காட்டி நிற்கிறது. இது தொடர்பான தகவல்கள் நேரடி ரிப்போர்ட்டில்….

'அவலங்களின் மீது நடாத்தப்படும் அற்ப அரசியல்" எனும் சிறப்புக் கட்டுரை இடப்பெயர்வின் பின்னரும் தமிழ் மக்களைத் தொடரும் வறுமை நிலை, மீள்குடியேறிய பின்னர் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை முன்வைத்து அரசியல்வாதி களால் அரங்கேற்றப்படும் அற்ப அரசியல் என்பவற்றை எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கின்றது.

உண்மையின் பதிவில் மலையகப்பெண்களின் அவல நிலை அலசப்பட்டுள்ளது.

விடிவைநோக்கிய உறவுகளுக்குக் கைகொடுப்போம்” எனும் தலைப்பிடப்பட்டுள்ள கட்டுரையில் கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்களின் வன்னிக்கான கல்விப்பயணம் , இன்னமும் நாம் கல்விச்செல்வத்தினை இழக்கவில்லை என்பதனை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதப்பட்டு ள்ளது.

“தமிழர் பண்பாடும் நாகரிகமும்” எனும் சிறப்புக்கட்டுரை வரலாற்றை ஒருமுறை திரும்பிப்பார்க்க சந்தர்ப்பமளிக்கின்றது..
எம். சகாப்தீனின் “ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் தயங்குவது ஏன்?” என்ற ஆய்வுக் கட்டுரையில், முஸ்லிம் தலைமைகள் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் அவர்களுடைய பிரச்சினைகள் பற்றிய சரியான தரவுகளுடன் சாட்சிய மளிக்கமையே, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததற்கான காரணம் என்பதை சுட்டிக் காட்டி நிற்கின்றது.

இழப்பதற்கு இனி எதுவுமின்றி இருக்கும் எம்மினத்திற்கு இனி இருப்பது 'பேனா" எனும் பலம் ஒன்றே என்பதை இருத்தி 'பேனாக்கள் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆசிரியரின் இருப்புடன் இம்மாத இருக்கிறமின் இருப்பை உணர்த்தி நிற்கின்றது இம்மாத இருப்பு. இன்னும் கட்டுரை, சிறுகதை, கார்ட்டூன், திரைப்பார்வை, மருத்துவப்பார்வை, என்பவற்றுடன் இம்மாத 'இருக்கிறம்" வெளிவந்துள்ளது.

படித்துப் பாருங்கள். உங்கள் பெறுமதிமிக்க விமர்சனங்களை ஏற்க எம் கருத்துக்களம் என்றுமே தயாராக உள்ளது.