'இருக்கிறம்'

சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையாக இருக்கிறம் மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் சஞ்சிகையை மாதமிருமுறை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதங்கள், பொருளாதாரத் தடைகள் என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் இருக்கிறம் வெளிவந்துகொண்டிருந்ததை யாவரும் அறிவர். அதிகரித்து வரும் செலவீனங்கள், விநியோகத்திலுள்ள ஆட்பல பற்றாக்குறை, சந்தைப்படுத்தலிலுள்ள குறைபாடுகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கிறம் சிக்கித் திணறத்தொடங்கியதால் ஜனவரி மாதம் 64 ஆவது இதழுடன் தனது பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. எனினும் இச்சஞ்சிகைக்காக இரவுபகல் கண்விழித்து அயராது பாடுபட்டுவரும் துடிப்புமிக்க இதழியல் துறைசார்ந்த இளைஞர் குழுவினருடன் பணியாற்றும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மீண்டும் இருக்கிறம் சஞ்சிகையை கொண்டுவர பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். மனதில் துணிவும், நம்பிக்கையும், ஆதரவளிக்கும் வாசகர்களும் இருக்கிறமுடன் கூடவே இருந்ததால் மீண்டும் இருக்கிறம் தனது பயணத்தை வார இதழாக ஆரம்பித்து இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது என்பது எந்தளவுக்கு சவாலானது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடிய சஞ்சிகைகளின் போட்டியைச் சமாளிக்க வேண்டும். அந்தளவு தூரத்திற்கு அதற்கான விடயப்பரப்போ, அச்சுத் தரமோ, வாசகர்களின் ஆதரவோ இலங்கையில் இல்லை. அதனால்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் நின்று போன சஞ்சிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பற்றி எரியும் அன்றாடப் பிரச்சினைகள், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டு நிற்கும் சிக்கல்கள் போன்றவற்றையே பெரும்பாலும் உள்ளடக்கங்களின் பிரதான கருப்பொருளாகக் கொண்டு ~இருக்கிறம்’ வெளியாவதால் அது தமிழ் பேசும் மக்களின் உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக நிற்கின்றது என்பது வெள்ளிடைமலை. ஏனைய சஞ்சிகைகள் இலக்கியத்தை முதற் பொருளாகப் பேச, ‘இருக்கிறம்| வெகுசன வாசிப்புக்குத் தீனிபோடும் பல்துறை சார்ந்த இதழாகத் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது. இலக்கியத் தரப்பை மட்டுமல்லாமல், சகலரையும் வாசிக்க வைக்கவேண்டுமென்பதே இதன் நோக்கம். ஆரோக்கியமான வாசிப்பு அனுபவத்தைத் தருவதுதான் ‘இருக்கிறம்’ பெற்றுள்ள வெற்றிக்குப் பிரதான காரணம். இவற்றுக்கும் மேலாக சமூக அவலங்களை பிரதேச மண்வாசனையோடு நகைச்சுவையாகத் தருவதில் ‘இருக்கிறம்’ ஒரு தனித்துவத்தைப் பெற்றிருக்கின்றது. கருத்தைக் கவரும் லாவகமான எழுத்து நடை, காத்திரமான கட்டுரைகள், நேர்த்தியான அச்சு, ஒழுங்கமைப்பான பக்க வடிவமைப்பு, கவர்ச்சியான கட்டமைப்பு, வண்ணப் பிரதிபலிப்பு, இதுவே “இருக்கிறம்”. அதென்ன “இருக்கிறம்” என்று இன்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். யுத்த அழிவுகளில் சிக்கி, ஆக்கிரமிப்பு, அழுத்தங்களில் துவண்டு, வாழ்வியல் சோகங்களில் மூழ்கி நலிவுற்றிருக்கும் எமது தமிழ்பேசும் மக்களையோ அல்லது புலம்பெயர் தமிழர்களையோ பார்த்து “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “இருக்கிறம்” என விரக்தியாகப் பதில் சொல்வார்கள். ஆனால் நாங்களும் “இருக்கிறம்” என்ற அடையாளத்தோடு உயிர்த்துடிப்புள்ள சஞ்சிகையாக இருக்கிறம் நான்கு ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ‘ஏதோ இருக்கிறம்’, ‘எப்படியோ இருக்கிறம்’, ‘சும்மா இருக்கிறம்’, என்பவர்களுக்கிடையில் ‘இருக்கின்றவர்களுக்காய் இருக்கிறம்’ என்ற தற்துணிவுடன் இருக்கிறம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. உலகில் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளோ நூல்களோ பெயர்ச்சொல்லில்தான் தமக்குரிய பெயரை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்காய் வினைச்சொல்லிலே இருக்கிறம் தனது பெயரை வகுத்துக் கொண்டது. ஏனெனில் இன்று நாமெல்லாம் வினைகளாகத்தானே இருக்கிறோம். இருக்கிறமின் மகுட வாக்கியம் “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்ற யோகர் சுவாமிகளின் கூற்று. ‘ஒரு பொல்லாப்புமில்லை, எப்பவோ முடிந்த காரியம்..” என்றார் அந்த தேரடிச் சித்தர். உண்மைதான் ‘ஒரு பொல்லாப்பும் இல்லை| என்பதோடு, ‘இருக்கிறம்| தனது செயற்பாடுகளை வரையறுத்துக் கொள்ளாது எமது எதிர்காலம் குறித்து அறிவார்ந்த ஆய்வு முறைகளுக்கும் இடம் தருகின்றது. ஈழத்தமிழ்ச் சமூகம் தனது கலைந்து போன கனவுகளை நனவாக்குவதற்கு இந்த அணுகுமுறை அவசியமானதால் அதை நோக்கிய இருக்கிறமின் பயணம் மிகவும் துணிச்சலானது. ‘இருக்கிறம்’ என்ற சின்னத்தில் இரண்டு காகங்கள் ஏன் எதிரும்புதிருமாக ஒன்றையொன்று பார்த்தவண்ணம் உட்கார்ந்திருக்கின்றன? காகத்தை விட வேறு பறவைகள் சின்னங்களாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். எங்களுடைய நாட்டில் காகம்தான் எங்கும் காணப்படும் பறவை. சாதாரண பொது சனங்களை அது அடையாளப்படுத்துகிறது. காகம் எமது வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புபட்டது. ஒரு இரையைக் கண்டால் தான் மட்டும் உண்ணாது தனது சகாக்களையும் அழைத்து பகுத்துண்ணும் பழக்கம் கொண்டது. சைவசமயத்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கும் போது உணவின் சிறுபகுதியை முதல் காகத்திற்கு வைத்தபின்னரே உண்ணத் தொடங்குவார்கள். இவை அனைத்தும் இன்று எமது சமூகத்திற்குத் தேவை. பண்பாடு, பழக்கவழக்கம் இரண்டும் இன்று ஐந்தறிவு ஜீவனாகிய காகத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தியலின் அடிப்படையிலே காகம் இருக்கிறமின் சின்னமாகியது. பத்திரிகை உலகில் 80 வருடகால அனுபவத்தைக் கொண்ட வீரகேசரியின் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டுடன் ‘இருக்கிறம்’ சஞ்சிகை இன்று கைகோர்த்திருக்கின்றது. ‘இருக்கிறம்’ சஞ்சிகையின் பதிப்புரிமை மற்றும் விநியோக, விளம்பரப் பணிகளை வீரகேசரி நிறுவனம் பொறுப்பேற்றிருக்கிறது. இதுவரை மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த ‘இருக்கிறம்’ எதிர்வரும் ஏப்ரல் 4 முதல் வார இதழாக வீரகேசரி வெளியீட்டகத்தின் கீழ் வெளிவர இருப்பது வாசக நெஞ்சங்களின் அறிவுப்பசிக்கு தீனிபோடுவதாய் இருக்கும். இலங்கைத் தமிழ் சஞ்சிகை வரலாற்றிலே இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம். எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் புதியபாதையில் பயணிக்கவிருக்கும் ‘இருக்கிறம்’ சஞ்சிகைக்கு வீரகேசரி சரியான ஒரு அடித்தளத்தையிட்டிருக்கிறது. வீரகேசரியின் ஆதரவுக்கு எமது நன்றிகள். வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ள சமூகமாக தமிழ்பேசும் மக்கள் இருப்பது இன்று பெரும் குறையாக இருக்கின்றது. இந்நிலையில் இவர்களை வாசிக்கத் தூண்டுவது ஒரு சஞ்சிகையின் பெரும் பணியாக இருக்கிறது. இலக்கியச் சிற்றேடுகள், ஜனரஞ்சக இதழ்கள் என்று வேறு திசைகளில் பயணித்த காலம் கரைந்து கொண்டு போகிறது. உயிர்மை, அம்ருதா, தீராநதி போன்றவை வாசகர்களுக்கு சீரியசான விடயங்களையும் எளிமையாகக் கொடுத்து வருகின்றன. ஆனால் ‘இருக்கிறம்’ அவற்றின் வழியில் கூடப் பயணிக்காது தனிவழியே செல்வது குறிப்பிடத்தக்கது. இன்று எமது மக்களைப் பொறுத்தவரையில் மாற்றம்தான் ஒரு முடிவாக இருக்கின்றது. மாற்றுக் கருத்துக்களும் மாற்றுச்சிந்தனைகளும் இன்று தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில் அதற்கான சமூக சஞ்சிகையாக இருக்கிறமின் எழுச்சி எதிர்காலத்தில் வாசகர்கள் மத்தியில் புதிய திசையொன்றைச் சுட்டிக்காட்டி நிற்கும் என்பது திண்ணம்.

Sunday, November 27, 2011

28.11.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழில் வெளியான ஆசிரியர் தலையங்கம்.

காலம் ஒருநாள் மாறும்.

வணக்கம் என் உறவுகளே!

கால மாற்றத்தின் முடிவுறாத நிகழ்வின் ஊழித்தாண்டவம் எமது நிலங்களை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டது. மழை, வெள்ளம், இடப்பெயர்வென எமது நிலம் நீரால் நிறைந்து கிடக்கின்றது. நிவாரணத்துக்காய் மக்கள் அலைந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பாதியில் கைவிடப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களும். வீட்டுத் திட்டங்களும் மக்களைப்பார்த்து எக்காளமாய்க் கூச்சல் போட்டுச் சிரிக்கின்றன. எமது பிரதேசங்களில் அலைந்து வருகின்ற மனித ஓலங்கள் இன்னும் முடிவறாத பயணங்களில் துயரம் சூழ பயணித்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் வாசல்கள் இருண்டு போய்க்கிடக்கின்றன. பாதுகாப்பின் அடையாளங்கள் எங்கள் நிலங்களைக் கிளறி அடிக்கடி பயமுறுத்துகின்றன.

மௌனமாக எம் மன இடுக்குகளில் பதியப்பட்டுள்ள உயிரின் உணர்வுகளோடு ஒன்றிப்போக வாழ்வு நகர்கிறது. இமைப்பொழுதிலும் ரணமாகும் உயிரின் நிதர்சனத்தை உணர்ந்தவர்களாக எங்களின் வாழ்வு மழைநீருடன் கரைந்து கொண்டி ருக்கிறது.

நீண்டதும் கடினமானதுமான இழந்த வாழ்வை மீட்டெடுப்பதற்கான எமது போராட்டத்தில் நாம் சந்தித்து வருகின்ற இன்னல்கள், இடையூறுகள் ஏராளம். ஆனாலும் நாம் மனம் துவண்டு விடவில்லை. சவால்கள் நிறைந்த காலகட்டமாக இன்றைய நாட்கள் இருப்பினும் அதுவே எமது நம்பிக்கைக்கான காலகட்டத்தின் அத்திபாரக் கற்களாக இருக்கிறன.

ஐ.நா. மனித உரிமைச் சட்டங்கள், போர் நெறிமுறைகள் மற்றும் உலக இராஜ தந்திர ஒழுங்குகள் போன்றவற்றையெல்லாம் அரசு கேள்விக் குறியாக்கியுள்ளதுடன், போர்க்குற்றம் புரிந்த இராணுவ அதிகாரிகளை இராஜதந்திரிகளாக வும் தூதரக அதிகாரிகளாகவும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் துணிச்சலாக அமர்த்தியுள்ளது.

போர்க்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதோடு தமிழர்களுக்கான ஓர் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை அனைத்துலகச் சமுகத்திற்கு அழுத்தம் கொடுக்க வெண்டிய பொறுப்பு தமிழ்பேசும் தலைமைகளிடம் இருக்கின்றது. யுத்தத்தின் பின்னரான இந்த இரண்டரை ஆண்டுகளில் எமது உறவுகளின் அரசியல் தீர்வுக் கான எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளாமல் அவர்களை இன்னமும் ஒரு அரசியல் வெறுமைக்குள் வைத்திருக்கவே எமது அரசாங்கம் முனைவது கடந்த நாட்களில் ஏற்பட்டு வருகின்ற நிகழ்வுகளின் கசப்பான நினைவுகளிலி ருந்து தெரிகின்றது.

ஏற்கனவே இருந்த உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் எமது மக்கள் மீண்டும் குடியேற அனுமதிக் கப்படாத நிலையில் மேலும்பல வாழ்விடங்கள் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுத் எமது உறவுகள் தமது வாழ்விடங்களுக்குச் செல்லமுடியாமல் தடுக்கப்படுகின்றனர். தமிழர் வாழ் விடங்களில் திட்டமிடப்பட்ட முறையில் கலாச்சாரச் சீரழிவு பரப்பப்படுகிறது. அசாதாரண சம்பவங் களை உருவாக்கித் தமிழ்மக்கள் மீது உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியும் போரற்ற சூழ்நிலை யிலுங் கூட மக்கள் வாழ்விடங்களில் படையினரின் பிரசன்னத்தை அதி கரித்தும் எமது மக்களின் நாளாந்த வாழ்வியலைக் குழப்பி அவர்களைப் பதட்ட நிலைக்குள் வைத்து அரசியல் செய்வதே இந்த ஆட்சியாளர்களின் நோக்கமாக இருக்கின்றது.

எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து மீள வாழ்வதற்காக முயற்சி செய்வோம். எமது மக்களின் மனங்களில் அமைதி நிலவுவதற்கு காலங்கள் காத்திருக்கின்றன. கடந்த காலத் தவறுகளில் ஏற்பட்ட முரண்பட்டநிலை நீங்கவேண்டுமாக இருந்தால் அரசாங்கம் மக்கள் மயப்படுத்தப்பட்ட அபிவிருத்தியை செய்யவேண்டும். யுத்தநிலை முடிந்து மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள். அமைதியாக வாழ்க்கையைக் கொண்டு போவதற்காக முயற்சிக்கின்றார்கள். இருந்தும் அது முடியவில்லை. இதுவரையும் எந்த அரசியல் தீர்வையும் அரசு முன்வைக்க வில்லை. எமது மக்கள் நியாயமானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்கு உலகநாடுகள் ஆதரவளிக்க வேண்டும்.

நிறையவே மக்களின் எதிர்பார்ப்புக்கள். நினைக்கவே முடியாத ஏமாற்றங்கள் என மனதில் கனதி யுடன் எங்களின் காலம் பயணிக்கிறது. அவர்களின் அவலங்கள் மறையவேண்டும். ஏக்கங்கள் தீரவேண்டும் எமது இளைய சமுதாயம் மக்களின் காவலர்களாக சமூகசிந்தனையுடையவர்களாக நினைவுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்களாக மாற வேண்டும். காலம் ஒருநாள் மாறும்.

உறவுகளின் கனவுகள் நிச்சயமாய் இப்பூமியில் பூக்கும் என்ற நம்பிக்கையுடன் கடைசி இதழில் கனத்த மனதுடன் உங்களிடமிருந்து விடைபெறுகின்றேன்.

ஆசிரியர்
28.11.2011

Monday, November 21, 2011

21.11.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழில் வெளியான ஆசிரியர் தலையங்கம்.

கார்த்திகைத் தீபஒளி

வணக்கம் என் உறவுகளே!

கார்த்திகை மாதம் கனவுகளைச் சுமந்து உயிர்களின் வலிகளைத் தொலைத்த மாதம். எம்மினத்தின் வரலாற்றுப் பயணத்துக்காய் கருவாகி வித்தாகி வீழ்ந்து கிடக்கும் எம் உறவுகளை நினைவுகூறும் அந்த நாட்கள் நினைவில் கனக் கின்றன.

புனித பூமியில் புயலாய் விசிய பயங்கரவாதம் எமது நிலங்களை ஆக்கிர மித்து உறவுகளைத் தொலைத்துச் சென்றதன் விளைவு.. இன்று எமது வீரத்தின் சின்னங்களுக்கு நன்றிசெலுத்தும் காலம் கனவாய்க் கலைந்து கிடக்கிறது. கல்லறைகள் சிதைக்கப்பட்டு முட்புதர்களால் மண்டிக் கிடக் கின்றன. மண்ணோடு மண்ணாய்ப் புதையுண்டு கிடக்கும் உறவுகளின் கனவுகள் தீர்வுகளுக்காய் அலைந்து கொண்டிருக்கின்றன.


சில்லென்று வீசிய காற்றும். சுகந்தம் வீசிய ரோஜாச் செடிகளும். அமைதியை உணர்வுகளால் உணரவைத்த கார்த்திகைத் தீப ஒளியும் இன்று அழிந்து போய்க்கிடக்கின்றது. ஆனாலும் உணர்வுகளால் வாழும் எம் உறவுகளின் மனங்களில் கார்த்திகை மாதம் பல அழியாத நினைவுகளை நினைவூட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது. வெறும் கண்ணீரை மட்டுமே காணிக்கையாக்கும் நிலையில் எமது சனங்களின் வாழ்வு இன்று வலுவிழந்துபோய்க் கிடப்பதால் தான் என்னவோ கார்த்திகை மாதம் பூக்கும் கார்த்திகைப் பூக்களிலிருந்து கந்தக நெடி வீசுகிறது.


எந்தவித இராஜதந்திரம் இல்லாத அரசியல், சுயநலப் போக்குடைய உணர்ச்சி வசப்பட்ட அணுகுமுறை யாவும் மேலும் மேலும் எமது சனங்களின் வாழ்க் கையை பாதாள உலகத்திற்கே இட்டு சென்று கொண்டிக்கின்றன. முன்பு “ஒற்றுமையாகுங்கள்” என்று கூறிய வசனம் இன்று வேற்றுமையிலும் ஒற்றுமை காணுங்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. புலம்பெயர் தேசத்தில் பூதாகாரமாய் உருவெடுக்கும் கோஷ்டி மோதல்களும் குத்து வெட்டுக்களும் கூத்தாடியாக இருக்கும் சமூகத்தை குதுகலத்தில் குளிக்க வைத்திருக்கின்றன. இதுவே முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் சர்வதேசம் சிரிக் குமளவிற்கு புலம்பெயர்வாழ்வில் தற்போதைய அரைகுறை அல்லது அரைக் கால் தலைவர்கள் என தங்களை பெருமிதத்துடன் கூறுபவர்களினால் எம்தேச மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட பிரமிக்கக்கூடிய வெற்றிகள்.


சிங்கள பௌத்த தேசம் ஒற்றுமையாக, இராஜதந்திர ரீதியாக, உணர்ச்சி வசப்படாத அணுகுமுறைகளினால் பெற்றுள்ள வெற்றிகளைகண்டு இன்று சர்வதேசம் திகைத்துள்ளது மட்டுமல்லாது, சர்வதேசம் மேலும் அவர்களுக்கு உதவப்போகிறது என்பதை அண்மையில் நோர்வேயில் நடைபெற்ற அறிக்கை வெளியீட்டு விழாவில் நடைபெற்ற உரைகள் கேள்வி பதில்களிலிருந்து ஊகிக்கக்கூடியதாகவுள்ளது. ஆகையால் உண்மையான சர்வதேச நிலைமை என்ன என்பதை புலம்பெயர் வாழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இது.


சாத்வீக வழியில் எங்கள் அரசியல் உரிமைக்காக போராட வேண்டிய பொறுப்பு இன்று புலம்பெயர்ந்த உறவுகளுக்கு இருக்கிறது. அரசியல் போரா ட்டங்களை புலத்தில் அல்லாமல் நிலத்திற்கு மாற்றிக் கொள்வதே இன்ற அவசியமான தேவையாக இருக்கின்றது என்பதை எமது உறவுகள் உணர்ந்து கொள்ள வெண்டும்.


அவசியமானவற்றை அலட்சியம் செய்துவிட்டு தேவையற்ற முறையில் தமக்குள் தினமும் பிரச்சனைகளை அதிகரித்து கொள்வது, இறுதியில் எமது இனத்தை நாமே தாரைவார்த்து கொடுக்கும் நிலையை உருவாக்கும். ஆகையால் வருமுன் காப்பவர்களாக எங்களை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். ஒற்றுமை கலந்த கடமையுணர்வுடன் நாம் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய வேளை இது. உண்மையுடனும் உறுதியுடனும் உழைத்து கார்த்திகைப் பூவுக்கு உரித்தானவர்களின் கனவை நனவாக்க ஒவ்வொரு தமிழனும் உறுதிபூண்டு செயற்பட வேண்டும். இதுகண்டு மானமொன்றே வாழ்வென வாழ்ந்த எம் உறவுகளின் ஆன்மா சாந்தியடையட்டும்.


இழந்த உறவுகளை நினைவுகூறி நிற்கும் கார்த்திகைத் தீபஒளியின் கதிர்கள் அமைதியான வாழ்வுக்கான வழியை அடுத்த தலைமுறைக்காவது காட்டி நிற்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த இதழில் சந்திக்கிறேன்.
ஆசிரியர்
21.11.2011

21.11.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழில் வெளியான கார்ட்டூன்

14.11.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழில் வெளியான கார்ட்டூன்

Wednesday, August 3, 2011

01/08/2011 முதல் விற்பனையில்!!

25.07.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழ் - 17

வாசிக்கத் தவறாதீர்கள்!!!!!!

“கறுப்பு ஜூலையின் கறுப்பு நினைவுகள்”
தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம் பற்றிய ஓர் வரலாற்றுப் பார்வை.

“யாழில் மிரட்டும் மினிவான்கள்”
யாழ்ப்பாண மினிவான்களில் நடக்கும் அட்டகாசங்களை வெளிக்கொண்டுவரும் உண்மையின் பதிவு.

“பீமன்கல் கிராமம் இழந்து நிற்கும் பொருளாதார வளம்”
நேரடி ரிப்போர்ட்

“சமுதாயத்தின் மறுபக்கம்”
இப்படியும் நடக்கிறது ஓர் தொகுப்பு.

“அபிவிருத்தியை நோக்கி….”
அபிவிருத்தியின் பதிவுகள்.

“அரசியல் சூழலுக்கு அவசியமான பாதுகாப்புச் சபைப் பிரேரணை – 1325”
தருவது மிஸ்டர் குரோ

“பாசம் + சட்டம் ஸ்ரீ கண்ணீர்”
தெய்வத் திருமகள் திihப்பட விமர்சனம்.

மேலும் பல வித்தியாசமான அம்சங்களுடன் வெளிவந்துவிட்டது இவ்வார இருக்கிறம் இதழ்.

Monday, July 25, 2011

18.07.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழ் - 16

வாசிக்கத் தவறாதீர்கள்!!!!
“விடுதலைப் புலிகளோடு முடிந்துவிட்ட முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றுப் பாத்திரம்”
-அரசியல் கட்டுரை தருவது மிஸ்டர் க்றோ

“ஓமந்தை வரையிலான யாழ்தேவியின் பயணம்”
- ஸ்பெஷல் ரிப்போர்ட்.

“நாற்காலிக்காக நடாத்தும் போராட்டம்”
-எஸ்.எம்.கோபாலரத்தினம்

“உறவின் குரல்கள்” காணாமல் போன உறவகளின் கண்ணீர்க் கதறல்கள்

புனரமைக்கப்படும் “யாழ் கோட்டை” ஓர் வரலாற்றுப் பொக்கிஷம்
-நேரடி ரிப்போர்ட்

மாற்று வலுவுடைய யாழ் மாணவன் துசியந்தனின் ஒலிம்பிக் சாதனை
-யாழில் இருந்து எஸ்.ஏ.யசீக்

“கூடாரங்களில் வாழும் கொக்கிளாய் மக்கள்” கவர் ஸ்டோரி

பூர்வீகக் கிராமமொன்றின் கதை
-வன்னியிலிருந்து நேரடி ரிப்போர்ட்

11.07.2011 திங்கள் “இருக்கிறம்” வார இதழ் - 15

வாசிக்கத் தவறாதீர்கள்!!!!
மறைந்தும் மனங்களில் வாழும் ‘மாமனிதன்’
பேராசிரியர் கா.சிவத்தம்பியின் நினைவுப் பகிர்வு

“நம்பிக்கையுடன் மீண்டெழும் கனகராயன்குளம் கிராமம்”
வன்னியிலிருந்து ஓர் நேரடி ரிப்போர்ட்

எம் உணர்வுகளை உருக்கும் “உறவுகளின் குரல்கள்”
காணாமல்போன உறவுகளின் கண்ணீரின் கதறல்கள் தொகுப்பு

அரசியல்வாதிகளால் “பழிவாங்கப்படும்” அரச அதிகாரிகள்

“மீள்குடியேற்றப்பட்டும் மீட்சிபெறாத யாழ் குடாநாட்டு முஸ்லிம் மக்கள்”
யாழில் இருந்து ஒரு நேரடி ரிப்போர்ட்

“அதிகாரங்கள் குவிந்து கிடந்தாலும் காலம் கடத்துவதற்கு ஒரு தெரிவுக்குழு”
எஸ்.எம்.ஜி தரும் அரசியல் கட்டுரை

“கண்ணீரைத் துடைக்குமா காலம் தாழ்ந்த நீதி”

இலங்கையின் இனப்படுகொலையை நினைவு படுத்தும்
“கம்போடியாவின் கொலைக் களங்கள்”

Friday, July 1, 2011

04.07.2011 திங்கள் வெளிவரும் இருக்கிறம் வாரஇதழில்

வாசிக்கத் தவறாதீர்கள்!!!
"இருக்கிறம்"வாரஇதழ் 14 இல்….

சாரதி அனுமதிப்பத்திர அலுவலகத்தில் “இலஞ்சம்”
-வசமாக மாட்டிக்கொண்டார் வாயிற்காவலாளி

“தலைமைத்துவ பயிற்சிகள் இராணுவ முகாம்களுக்குள் ஏன் நடக்கவேண்டும்?”
-கேள்வியெழுப்புகிறார் பேராசிரியர் ஹெட்டிகே

“வன்னியிலிருந்து வந்தவர்களை வேற்று மனிதர்களாக நடத்துகிறார்கள்”
-கோப்பாயிலிருந்து நேரடி ரிப்போர்ட்

அடிப்படை வசதிகளை எதிர்பார்த்து நிற்கும் வவுனியா இளமருதங்குளம் மக்கள்
-வவுனியாவிலிருந்து நேரடி ரிப்போர்ட்

அழிவிலிருந்து மீண்டெழும் கிராமத்தின் கதை – பூநகரி

Tuesday, March 29, 2011

இருக்கின்ற எல்லோருக்காகவும் தொடர்ந்து இருப்பம்!!

லங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சஞ்சி கை ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது என்பது எந்தளவுக்கு சவாலானது என்பது அனை வருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடிய சஞ்சிகைகளின் போட்டியைச் சமாளிக்க வேண்டும். அந்தளவு தூரத்திற்கு அதற் கான கருப்பொருளோ. அச்சுத்தரமோ, வாசகர் களின் ஆதரவோ இலங்கையில் இல்லை. அதனால் தான் இலங்கையைப் பொறுத்தவரையில் நின்று போன சஞ்சிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இலக்கியத்தைப் பிரதான பொருளாகக் கொண்டுள்ள சிறுசஞ்சிகைகள் மட்டும்தான் இலங் கையில் தமது இருப்பை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் நிலையில், பல்சுவைகளையும் கொண்டு ஒரு சமூக சஞ்சிகையாக தமிழக சஞ்சி கைகளுக்கு நிகராக கடந்த மூன்று வருடகாலமாக இருக்கிறம் வெளிவந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே!

மக்கள் உண்மையாகப் பங்கேற்கும் ஜனநாயகக் கட்டமைப்பானது, ஒரு சமூகத்தின் விழுமியங்கள் மற்றும் கண்ணோட்டங்களை மாற்றினாலேயன்றி உருவாக முடியாது. இதனால், ஒரு நீண்ட கால நோக்கில், பரந்துபட்ட மக்களுடன் உரையாடும் ஒரு ஊடகமாக, சமூகத்தின் கருத்துருவாக்கத்தினை ஏதுவாக்கும் முற்போக்கான விழுமியங்களை விதைக்கும் கருவியாக “இருக்கிறம்” சஞ்சிகை 2007ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இதன்படி, மக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவதுடன் வித்தியாசமான மக்கள் குழுமங்களின் மற்றும் சமூகங்களின் குரல்களைப் பிரதிபலித்தும் ஊடகமாகவும் இருக்கிறம் இருந்து வருகின்றது. எமது பாரம்பரிய விழுமியங்களை எங்கு கேள்வியெழுப்ப வேண்டுமோ அங்கு துணிந்து கேள்விக்குட்படுத்துகிறது. மக்களைப் பொறுப்பு மிகுந்த பிரஜைகளாக மாற்றும் கடமையை அது தவறாது செய்தும் வருகின்றது. மக்கள் தொடர்ந்து ஆதரிக்கும் தங்குதிறன் மிக்க சஞ்சிகையாக இருக்கவேண்டுமென்பதற்காக பொழுதுபோக்கு அம்சங்கள் சேர்ந்திருந்தாலும் அந்த அம்சங்கள் கூட சஞ்சிகையின் கொள்கைகளை அடியொற்றி அமைக்கப்பட்டு இருப்பது இருக்கிறமின் தனிச்சிறப்பு ஆகும்.

புதிய மாற்றத்தை நோக்கியும் இளைஞர்களிடையே சமூகசேவையையும், புதிய சிந்தனை மாற்றத்தையும் தோற்றுவிக்கவேண்டுமென்ற குறிக்கோளுடன் இருக்கிறம் இன்று 64 இதழ்களாக வெளிவந்து இலங்கையில் நீண்டகாலமாக (4வருடங்களாக) வெளிவரும் ஒரே ஒரு மக்கள் எழுச்சிமிக்க சஞ்சிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறது. இலங்கையில் இன்று வெளிவந்து கொண்டிருக்கும் 25க்கும் மேற்பட்ட சஞ்சிகைகளுக்கு மத்தியில், இலகுவான எவரையும் கவர்ந்திழுக்கும் தமிழ் நடையையும். வித்தியாசமான எழுத்துருவாக்க நடையையும், கொண்டு வெளிவருவது இருக்கிறமின் சிறப்பியல்பு.

தென்னிந்திய சொற்பிரயோகங்களும் எழுத்து நடையும் இலங்கை ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துகின்ற இக்கால கட்டத்தில் தனக்கேயுரிய தனிப்பாணியுடன் ஈழத் தமிழில் சொல்லாக்கங்களைப் பிரயோகிப்பது இருக்கிறமின் தனித்தன்மை. சிறந்த கவர்ச்சிகரமான பக்க வடிவமைப்பு, சொல்லாடல் மிக்க கதைச்சுருக்கம் என்பவையே இருக்கிறமை இன்று மக்கள் மத்தியில் தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகையாக தலைநிமிர்ந்து நிற்க வைத்துள்ளன.
வெளியீட்டிலுள்ள தாமதங்கள், பொருளாதாரத் தடைகள் என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் இருக்கிறம் வெளிவந்துகொண்டிருந்ததை யாவரும் அறிவர். அதிகரித்து வரும் செலவீனங்கள், விநியோகத்திலுள்ள ஆட்பல பற்றாக்குறை, சந்தைப்படுத்தலிலுள்ள குறைபாடுகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கிறம் சிக்கித் திணறத்தொடங்கியதால் கடந்த ஜனவரிமாதத்துடன் 64வது இதழுடன் தனது பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது.

எனினும் இச்சஞ்சிகைக்காக இரவுபகல் கண்விழித்து அயராது பாடுபட்டுவரும் துடிப்புமிக்க இதழியல் துறைசார்ந்த இளைஞர் குழுவினருடன் பணியாற்றும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் எழுத் தாளர்களும் மீண்டும் இருக்கிறம் சஞ்சிகையை கொண்டுவர பல முயற்சிகளையும் மேற் கொண்டனர். எனினும் மனதில் துணிவும் நம்பிக்கையும் ஆதரவளிக்கும் வாசகர்களும் இருக்கிற முடன் கூடவே இருந்ததால் மீண்டும் இருக்கிறம் தனது பயணத்தை ஆரம்பிக்கவிருக்கின்றது.

கொழும்பிலுள்ள எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட் நிறுவனத்தினருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளையடுத்து இருக்கிறம் சஞ்சிகையை அச்சிட்டு விநியோகிக்கும் பொறுப்பு இந்நிறுவனத்தினரிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கைத் தமிழ்சஞ்சிகை வரலாற்றிலே இது ஒரு மைல்கல் என்று சொல்லலாம். எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் புதியபாதையில் பயணிக் கவிருக்கும் இருக்கிறம் சஞ்சிகைக்கு இது சரியான ஒரு அடித்தளத்தையிட்டிருக்கிறது.

Monday, March 28, 2011

“இருக்கிறம்” இதழ் 64

அண்மையில் நாம் சந்தித்த பாரிய வெள்ள அனர்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறமின் 64வது இதழ் வெளி வந்துவிட்டது.

அண்மையில் தமிழினத்திற்குத் தலையிடியாகிப்போன இலங் கையின் தேசிய கீதம் இனி சிங்கள மொழியில் மாத்திரமே இசை க்கப்பட வேண்டும் எனும் அமைச்சரவைத் தீர்மானம் பற்றிய சிற ப்புக் கட்டுரையானது தமிழருக்கெதிரான புதிய அடக்கு முறைகள் எவ்வாறு தோற்றம் பெறுகின்றன என்பதை புலப்படுத்தி நிற்கி ன்றது.

இன்று வைத்தியசாலைகளில் மற்றும் அதற்காக வேலைசெய்யும் பிற ஊழியர்கள் நோயாளிகள் மீது காட்டும் அக்கறையில்லாத அலட்சியப்போக்கை இவ்விதழின் உண்மையின் பதிவு உதாரணத்துடன் விளக்கியுள்ளது.

இலங்கையில் எழுத்தாளர்களுக்கான இன்னுமொரு மைல் கல் லாக நடந்து முடிந்திருக்கிறது சர்வதேச எழுத்தாளர் மாநாடு. இதைப்பற்றிய ஒரு காத்திரமான விமர்சனம் உள்ளே…

“சடங்குகளும் சம்பிரதாயங்களும் அவசியந்தானா..” என்ற சிந்துஜாவின் கட்டுரையில் இன்றைய நவீன உலகில் இவ்வாறான வழக்கங்கள் மாறவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

“தெய்வ நிந்தனையின் பெயரால் உருவாகும் மதத்தீவிரவாதம்” யாவரும் வாசிக்கவேண்டிய கட்டுரை.

விளையாட்டுப் பிரியர்களுக்கு 'சாதனைகளும் வேதனைகளும்" ஓர் தொகுப்பாகத் தந்திருக்கின்றார் மயூரன்...

நேரிய சிந்தனை எம்மை நெறிப்படுத்தும் எனக்கூறும் வைத்தியர் முருகானந்தன் அவர்களின் மருத்துவக்கட்டுரை விரிவாக உள்ளே....

மேலும் 'வானத்தால் குதிக்கும் வடலிகள்" எனும் சிறுகதையும், 'தலையில்லா முண்டங்கள்" கவிதையும் இன்றைய யதார்த்தத்தைக் காட்டிநிற்கின்றது.

எமது இருப்பை கடத்தல்கள்,கொள்ளைகள் ஒருபக்கமும் இயற்கை அனர்த்தங்கள் மறுபுறமுமாக கேள்விக் குறியாக்கியிருக்கின்றது என்பதை புலப்படுத்தியிருக்கின்றது ஆசிரியரின் இருப்பு...

இன்னும் இளமை புதுமை கலாட்டா கட்டுரைகள் கவிதைகள் அறிவியல் தகவல்கள் தொழிநுட்பம் என அனைத்து அமசங்களையும் தாங்கி வந்திருக்கின்றது இம்மாத இருக்கிறம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

“இருக்கிறம்” இதழ் 63

இருக்கிறமின் 63 ஆவது இதழ் கோர யுத்தத்தின் விம்பங்களைப் பிரதிபலிக்கும் அடையாளங்களைச் சுமந்து, யுத்த அழிவுகளில் இருந்து மீள எத்தனிக்கும் மாங்குளத்தின் புகைப்படத்துடன் வெளிவந்து விட்டது.

இருக்கிறமின் இந்த இருப்பும் வாசகர்களுக்கு விருந்து படைக்க பல்வேறு புதிய அம்சங்களுடன் இருக்கிறது. புனரமைக்கப்பட்டு வரும் இராணுவ முகாம்களும், புதிது புதிதாக முளைக்கும் புத்தவிகாரைகளும் மாறிப்போன மாங்குளத்தைச் சுட்டிக்காட்டி நிற்கிறது. இது தொடர்பான தகவல்கள் நேரடி ரிப்போர்ட்டில்….

'அவலங்களின் மீது நடாத்தப்படும் அற்ப அரசியல்" எனும் சிறப்புக் கட்டுரை இடப்பெயர்வின் பின்னரும் தமிழ் மக்களைத் தொடரும் வறுமை நிலை, மீள்குடியேறிய பின்னர் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை முன்வைத்து அரசியல்வாதி களால் அரங்கேற்றப்படும் அற்ப அரசியல் என்பவற்றை எடுத்துக் கூறுவதாக அமைந்திருக்கின்றது.

உண்மையின் பதிவில் மலையகப்பெண்களின் அவல நிலை அலசப்பட்டுள்ளது.

விடிவைநோக்கிய உறவுகளுக்குக் கைகொடுப்போம்” எனும் தலைப்பிடப்பட்டுள்ள கட்டுரையில் கொழும்புப் பல்கலைக்கழக மாணவர்களின் வன்னிக்கான கல்விப்பயணம் , இன்னமும் நாம் கல்விச்செல்வத்தினை இழக்கவில்லை என்பதனை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதப்பட்டு ள்ளது.

“தமிழர் பண்பாடும் நாகரிகமும்” எனும் சிறப்புக்கட்டுரை வரலாற்றை ஒருமுறை திரும்பிப்பார்க்க சந்தர்ப்பமளிக்கின்றது..
எம். சகாப்தீனின் “ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் தயங்குவது ஏன்?” என்ற ஆய்வுக் கட்டுரையில், முஸ்லிம் தலைமைகள் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் அவர்களுடைய பிரச்சினைகள் பற்றிய சரியான தரவுகளுடன் சாட்சிய மளிக்கமையே, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததற்கான காரணம் என்பதை சுட்டிக் காட்டி நிற்கின்றது.

இழப்பதற்கு இனி எதுவுமின்றி இருக்கும் எம்மினத்திற்கு இனி இருப்பது 'பேனா" எனும் பலம் ஒன்றே என்பதை இருத்தி 'பேனாக்கள் பேச வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆசிரியரின் இருப்புடன் இம்மாத இருக்கிறமின் இருப்பை உணர்த்தி நிற்கின்றது இம்மாத இருப்பு. இன்னும் கட்டுரை, சிறுகதை, கார்ட்டூன், திரைப்பார்வை, மருத்துவப்பார்வை, என்பவற்றுடன் இம்மாத 'இருக்கிறம்" வெளிவந்துள்ளது.

படித்துப் பாருங்கள். உங்கள் பெறுமதிமிக்க விமர்சனங்களை ஏற்க எம் கருத்துக்களம் என்றுமே தயாராக உள்ளது.

Sunday, January 16, 2011

“இருக்கிறம்” இதழ் 62

‘மீண்டும் மக்கள் குடியேறும் விசுவமடு’ என்னும் தலைப்புடன் தமது இடத்தைநோக்கி நகர்ந்து செல்லும் மக்களின் ஒருபுறம் எதிர்பார்ப்பு நிறைந்த முகங்களைத் தாங்கிய புகைப்படத்தை அட்டைப் படமாகத் கொண்டு இருக்கிறமின் 62ஆவது இதழ் வெளிவந்துள்ளது.

மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று கருத்தைப் அடிப் படையாகக்கொண்டு வித்தியாசமான அட்டைப் பட வடிவமைப்புடன் வாசகர்களுக்கு விருந்து படைக்கவென புதியதொரு வகையிலும் புதுப்புது விடயங்களுடனும் வெளிவந்துள்ளது.

மக்களின் வாழ்க்கையோடு பிண்ணிப்பினைந்த கதைகள்,கட்டுரைகள் மற்றும் விளையாட்டு, சினிமா பற்றிய விடயங்களுடன் தொடர்கின்றது இருக்கிற மின் பார்வைகள்.

நேரடி ரிப்போட்டில் ‘மரணங்கள் மலியத் தொடங்கிய முதல் நிலம்’ எனும் தலைப்பில் விசுவமடு மக்களின் அவல நிலைபற்றி அலசி ஆராயப்பட்டுள்ளது.

'யாழ் - கொழும்பு பயணமும் திண்டாடும் பஸ் பயணிகளும்’ எனும் தலைப்பில் யாழ் கொழம்பு பயணிகள் படும் அவஸ்தைகள், சலிப்புகள் என்பவற்றை படம்பிடித்துக் காட்டும் வகையிலான ‘உண்மையின் பதிவு’ இம்முறை பிரசுரிக்கப் பட்டுள்ளது.

பழங்களைத் தோலுடன் சாப்பிடுங்கள்’ என்று சொன்னால் கேட்காதவர்களும் டொக்டர் முருகானந்தன் சொன்னால் கேட்குமளவுக்கு இம்முறை மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோய்க்கான குறிப்புக்களுடன் வெளிவந்துள்ளது.

இதைவிட பொலிஸ் முறைப்பாடுகள் பற்றி அறிந்தவர்கள் வெகு குறைவாகவே உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு இதுதொடர்பில் விளக்கம் அளிக்கும் வகையில் சட்டம் பேசுகின்றது பகுதி இம்முறை வெளியாகியுள்ளது.

‘யாழ்ப்பாணத்தில் எப்போது துளிர்விடும் ஐனநாயகம்?’ எனும் தலைப்பில் அன்மையில் இடம்பெற்ற ஐ.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெற்றி மீதான தாக்குதல் பற்றி சிறப்புக் கட்டுரைப்பகுதியை கண்ணன் எழுதியுள்ளார். மலையகத்தில் அதிகரிக்கும் சிறுவர் தற்கொலைகள் எனும் தலைப்பில் மலையகப்பிரதேச வாழ் சிறுமிகள் இருவரின் தற்கொலைச் சம்பவங்களைக் கூறும் அதிர்ச்சித்தகவலுடன் இம்முறை ‘க்ரைம் பக்கம்’ வெளிவந்துள்ளது.

ஐம்பது ஆண்டுகளாக உரிமைக்காக போராடிய ஒரு சமூகம் இப்போது தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. காலத்தின் கோலங்களாக உண்மையின் ஆய்வு புலனாய்வுப் பார்வையாக உள்ளே..

மேலும் இருந்ததையும் இழந்துவிட்ட பிறகு இருப்பிற்காய் இல்லாததைத் தேடுவதில் என்ன பயன்? என்று விளம்பும் ஆசிரியரின் இருப்புடனும் இருக்கிறமின் இம்மாத இருப்பை புலப்படுத்தி வெளிவந்துள்ளது இவ்விதழ்.

இவற்றோடு கார்ட்டூன், அதற்குத்தக, மொழிவாணனின் காற்றாய் வருவேன், அறிவியல் ரவுண்டப் வாசகர் கருத்து மற்றும் ‘கற்பு காணாமல் போய்விட்டதா’ என்ற மருதூர். ஏ. மஜீத்தின் சிறுகதையுடன் ‘இருக்கிறம்’ வெளிவந்துந்துள்ளது. படித்துப்பாருங்கள் உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை ஏற்க கருத்துக்களம் தாயாராக உள்ளது.

“இருக்கிறம்” இதழ் 61

இருக்கிறமின் 61 ஆவது இதழ் இதோ வெளிவந்து விட்டது. யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலையைப் பிரதி பலிக்கும் வகையிலான வடிவமைப்புடன் கூடிய அட்டைப்படத்தைத் தாங்கிவெளிவந்துள்ளது. 61 ஆவது ‘இருக்கிறம்’

வழமைப்போல கதைகள்,கட்டுரைகள், விளை யாட்டு, சினிமா. என்று பலதரப்பட்ட ஆக்கங்களுடன் வெளிவந்துள்ளது இம்மாத இதழ்.

நான்காம் பக்கத்தில், அஷ்ரப் சிஹாப்தீன் எழுதிய “மன்னார் செம்மொழி விழாவும்” சொல்லவேண்டிய சங்கதிகளும் ஸ்பெஷல் ரிப்போர்ட்டாக வெளி வந்துள்ளது. தமிழ்நாடு செம்மொழி விழாவை அடுத்து அண்மையில் மன்னாரில் நடத்தப்பட்ட செம் மொழி விழா பற்றிய நிகழ்வின் பதிவும் சொல்லப் படாத சங்கதிகளும் இதில் உள்ளடங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலையும், அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளிவந்துள்ளது.

பாதை ஒழுங்குகள்ஓட்டுனரின் ஒழுங்கு விதிகள் போன்றவற்றை ஆராயும் உண்மையின் பதிவு 12 ஆம் பக்கத் தில்.

எழுபது எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்பு தமிழ் - சிங்கள உறவுகள் எவ்வாறு இருந்தன? அவ்வுறவுகள் எவ்வாறு புதுப்பிக்கப்பட்டு வருகின்றன? அதற்குப் பின்னால் இருக்கும் விபரீதம் என்ன? ஒரு அனுபவப் பகிர்வாய் அமைந்திருக்கும் மூத்த பத்திரிகையாளர் கோபுவின் கட்டுரை இவ்விதழில்.

வாசகர்களின் மத்தியில் இன்று அதிகமாக எழும்புகிற சந்தேகமே இந்த நயன்தாரா - பிரபுதேவா சர்ச்சை! அந்தவகையில் அது தொடர்பில் சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றியும்இ அவர்களின் திருமணம் நிலைக்குமா என்பது பற்றியும் இ திருமணம் எவ்வாறான சட்டதிட்டத்தின் கீழ் அமையவேண்டும் என்பது பற்றியும்இ “சட்டம் பேசுகிறது” பகுதி அலசி ஆராய்கின்றது.

திரைப்பார்வையில் இரு மனங்களுக்கிடையிலான காதல் உணர்வுகளை உணர்வுபூர்வமாக தந்திருக்கின்ற “I the mood forLove” திரைப்படத்தின் சிறப்புக் கண்ணோட்டம் இடம்பெற்றிருக்கின்றது.

“புள்ளி விபரங்களின் பின்னால் மறைந்திருக்கும் சோகங்கள்” என்ற தலைப்பில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்கள் பற்றிய ஓர் சிறப்புக்கட்டுரை 34 ஆவது பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

தமிழ் கலாசாரம், பண்பாடு, ஒழுக்கம் என்பவற்றுக்கு இலக்கணமாய் இருந்த யாழ்ப்பாணம், போகும் போக்கைப் பற்றிய “ஸ்பெஷல் ரிப்போர்ட்” பக்கம் 26 இல்.

இவற்றுடன் பல அறிவியல் தகவல்கள், செய்திச் சிதறல்கள், அதற்குத் தக, தொடர், இலக்கியம், புலனாய்வுக் கட்டுரை, மருத்துவம், உளவியல், மலையகம், தொழிநுட்பம், நேர்முகம், ஊடக மயக்கம், சிறுகதைகள், நகைச்சுவை என்று பக்கங்கள் விரிகின்றன. உடனே வாங்கிப் படியுங்கள். உங்கள் கருத்துக்களை ஏற்க கருத்துக்களம் தயாராக இருக்கிறது.

“இருக்கிறம்” இதழ் 60

இதோ வெளிவந்துவிட்டது இருக்கிற மின் 60 ஆவது சிறப்பிதழ்.
வடக்கில் நடந்த ஏர்பூட்டு விழாவின் புகைப்படத்தை தாங்கி நூறு பக்கங்களில் வெளிவந்துள்ளது இம்முறை இருக்கிறம்.

யாழ்ப்பாணத்தில் 15 வருடங்களின் பின்னர் 950 ஏக்கர் பரப் பளவில் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் விவ சாயிகளுக்கு மானிய அடிப்படையில் உளவு இயந்திரங்கள் மற் றும் உரம் என்பன வழங்கப்பட்டன. இதற்குப் பின்னால் ஏழை விவ சாயிகளின் கருத்துக்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பது இவ்விதழின் ‘நேரடி ரிப்போர்ட்’.

எல்லோராலும் பரவலாக பேசப்பட்ட 'எந்திரன்' திரைப்படத்தின் விமர்சனம் எந்திர வேகத்தில் சுடச் சுட 'சங்கரின் எந்திரன் ஏற்படுத்திய மாயையும் கருணாநிதியின் ஏகபோக சினிமா வியாபார உத்தியும்’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

ஈழத்தமிழரின் கடல் வழிப்பயணம், பாக்கு நீரிணையில் அவர்கள் படும் அவலங்கள்,துயரங்கள் பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை 14 ஆம் பக்கத்தில்.

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்தவர்களின் அனுபவங்களுடன் 'படிப்பினைகள் சொல்லும் பாடம்’ என்னும் தலைப்பில் மூத்த எழுத்தாளர் கோபுவின் பேனா பேசியுள்ளது. 'உறவின் கதை' பகுதியில் வன்னியில் யுத்தத்தால் தன் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட ஒரு குடிமகன் தன் நிலையைக் கூறுகிறார்.

இம்முறைச் சிறப்பிதழில் சட்டத்தரணிகள் விவேகானந்தன் மற்றும் கே.ஜீ. ஜோன் ஆகியோர் வெவ்வேறான இரு சட்டங்கள் பற்றிப் பேசுகின்றனர். அத்தோடு வாசகர்களின் சட்டம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில்களும் வழங்கப்பட்டுள்ளன. இம்முறை ‘மலையகப் பகுதி’ சில ஆசிரியர்கள் தங்கள் தேவைகளுக்காக மாணவர்களை பயன்படுத்தும் நிலை பற்றியும் எதிர்காலத்தில் இதனை தடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் கூறுகிறது. மல்லிகா என்ற பெண் பேயின் பிடியிலிருந்து தப்புகிறான் ராஜா. பேயைக் கண்டுபிடிக்கும் படலம் ஆரம்பமாகிறது. அடுத்து நடக்கப் போவது என்ன என்பதை பக்கம் 58 இல் பாருங்கள்.

'ஒரு கண்டுபிடிப்பாளனாக வரவேண்டும் என்ற தலைப்பில் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து சாதனை படைத்துவரும் ஹட்டன் டிக்கோயாவைச் சேர்ந்த இளம் புத்தாக்குனர் மதனுடனான நேர்காணல் 68 ஆவது பக்கத்தை அலங்கரித்துள்ளது.

கரடியனாறில் நடந்த வெடிவிபத்தின் பின்னணி என்ன? பரபரப்பான புலனாய்வுக் கட்டுரை பக்கம் 88 இல்.

நீண்ட தூர பிரயாணத்தில் ஈடுபடும் பஸ்ண்டிகள் பயணிகள் தேநீர் அருந்தவோ சாப்பிடுவதற்கோ ஒரு இடத்தில் நிறுத்தப்படுவதுண்டு. அந்த இடங்களில் நடப்பது என்ன? அக்கடைகளின் சமைய லறை மற்றும் கழிவறைகளின் நிலை என்ன? இந்த இதழின் உண்மையின் பதிவைப் பாருங்கள்.

இவை மட்டுமல்ல. இன்னும் உள்ளே வசந்தம் அறிவிப்பாளர்களுடனான கலாட்டா, பதிப் பகத்தார், சிறுகதைகள், தொழிநுட்பத் தகவல்கள், கவிதைகள், ஜோக், அறிவியல் தகவல்கள், கார்ட்டூன் விளையாட்டு, சமையல் குறிப்புகள், மருத்துவம், மாணவர்களுக்கான பயனுள்ள தகவல்கள், நகைச்சுவைக் கதை, சினிமா, இலக்கியம் அத்தோடு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஊடக மயக்கம் பகுதி இன்னும் 60 ஆவது 'இருக்கிறம்’ சஞ்சிகையை வாழ்த்திய பலதரப்பட்டவர்களின் வாழ்த்துக்களும் இடம்பெற்றுள்ளன. உங்கள் கருத்துக்களை ஏற்க கருத்துக்களம் தயாராக இருக்கிறது.

“இருக்கிறம்” இதழ் 59

சிதைந்துபோன முல்லைத்தீவின் இன்றைய காட்சியை அட்டைப் படமாகக் கொண்டு கண்ணைக் கவரும் வண்ணத்தில் வெளிவந்துள்ளது 59 ஆவது ‘இருக்கிறம்’.

ஒவ்வொரு இதழிலும் வாசகர்களுக்கு புது விடயங்களை அள்ளி வழங்கும் 'இருக்கிறம்' இம்முறையும் பல விடயங்களை தாங்கி வந்துள்ளது.

ஆரம்ப ஆக்கமாகவே 'நல்லூர் கந்தனும் சிங்கள மக்களும்' என்ற தலைப்பில் விஜேந்திரன் நல்லூரின் இன்றைய நிலையை கண்முன் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.

நாளைய இலங்கையைப் பற்றி ஆரூடம் கூறுவதாக பதிப்பகத்
தார் அமைந்துள்ளது.

அன்றிலிருந்து இன்றுவரை முதலாளிகளின் தொழிலாளிகள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. அதிலும் மலையகத் தோட்டத்தொழிலாளிகளின் பாடு பெரும் பாடாக இக்கின்றது. இந்த நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக சந்திரசேகரனின் ‘அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட ஒரு அப்பாவி பெண்ணின் அழுகுரல்!’ கட்டுரை அமைந்துள்ளது.

அடுத்து மொழிவாணன் எழுதும் திகில்தொடரில் இம்முறை பேயின் குறி ராஜா. அவனுக்கு என்ன நடக்கப் போகின்றது என்ற மர்மத்துடன் கதை நகர்கின்றது.

சீ.என்.சீ கப்பலைப் பற்றிய கதை அண்மைய நாட்களாகப் பேசப்படும் ஒன்று. கனேடிய வாழ் இலங்கைத் தமிழர்களே, கனடாவுக்கு சீ.என்.சீ கப்பலில் வரும் தமிழர்களுக்கு எதிராகக் கோசம் எழுப்புகின்றனர் என்றால் நம்புவீர்களா? கண்ணனின் 'அகதிகளுக்கான வாசலை மூடத்தயாராகும் கனடா’ கட்டுரையை வாசியுங்கள்.

ஒவ்வொரு முறையும் வாசகர்கள் பயனுறும் வகையில் ஒவ்வொரு அடிப்படைச் சட்ட விளக்கம், சட்டத்தரணி விவேகானந்தனால் தரப்படுகின்றது. அந்தவகையில் இம்முறை திருமணத்தில் சட்டம் எவ்வாறு பயன்படும் என்பதை இந்த இதழின் 'சட்டம் பேசுகிறது’ பகுதி விளக்குகின்றது.

கொழும்பு பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்பட்ட முத்தமிழ் விழா வர்ணப்படங்களுடன் அரங்கியல் பார்வையாக வெளிவந்துள்ள அதேவேளை, அண்மையில் இலங்கை வந்து நந்தவனம் இலங்கை சிறப்பிதழை வெளியிட்ட நந்தவனம் ஆசிரியர் சந்திரசேகரனின் நேர்முகமும் இடம் பெற்றுள்ளது.

யுத்தத்திலிருந்து மீண்டும் யுத்தவடுக்களுடன் வாழும் முல்லைத்தீவு, மற்றும் அம்பாறை மாவட்டங்களின் இன்றைய நிலைப்பாடு, அம்மக்களின் இன்றைய நிலையை விளக்கும் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் ஆசிரியர்களின் பற்றாக்குறையால் இன்று மாணவர்களின் கல்வி நிலை எந்தளவு பாதிக்கப்பட்டுகின்றது என்பதை லோஜியின் 'ஆசிரியர் பற்றாக்குறையினால் மாணவர் இடைவிலகல்’ ஆக்கத்தில் விளங்கிக்கொள்ளலாம்.

இன்னும் பல வாழ்வியல், கட்டுரைகள், உளவியல், மருத்துவம், நகைச்சுவை, குட்டிக்கதை, பயனுள்ள அறிவியல் தகவல்கள், தொழில்நுட்பம், இருப்பு என பல அம்சங்களைத் தாங்கி வெளிவந்துவிட்டது 59வது 'இருக்கிறம்' உடனே வாங்கிப் படியுங்கள். உங்கள் கருத்துக்களை ஏற்க கருத்துக்களம் தயாராக இருக்கிறது.

“இருக்கிறம்” இதழ் 58

இருக்கிறமின் 58 ஆவது இதழ் வெளிவந்துவிட்டது. மீளக்குடிய
மர்ந்த வன்னி மக்களின் இன்றைய நிலை பற்றிய புகைப்படத்தை தாங்கி இம்முறை “இருக்கிறம்” வெளிவந்துள்ளது.

மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த கதைகள், கட்டுரைகள் மற்றும் விளையாட்டு, சினிமா பற்றிய விடயங் களுடன் பக்கங்கள் விரிந்து செல்கின்றன.

“நேரடி ரிப்போட்டில்” நாவாந்துறை மக்களின் தண்ணீர்ப் பிரச்சினை பற்றி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏறத்தாழ 65 குடும் பங்கள் வசிக்கும் அப்பிரதேசத்துக்கு குடிநீர் வழங்காமைக்கான காரணங்கள் பற்றி அலசி ஆராயப்பட்டு பல தகவல்களுடன் வெளிவந்திருக்கின்றது.

பக்கம் 9 இல் “எனது மகன் திரும்பி வருவான்” என்ற தலைப்பில் தீபச்செல்வன் எழுதிய சிறுகட்டுரை காணப்படுகின்றது. ஒரு தாய் தன் மகன் காணாமல் போனமை பற்றிக் கூறும் கண்ணீர்க் கதை நெருப்பாய்ச் சுழழும் நினைவுகளாய் சுட்டெரிக்கின்றது.

தொடரும் “காற்றாய் வருவேன்” பேய்க்கதைத் தொடரில் மொழிவாணன் தனக்கே உரிய பாணியில் இம்முறையும் ஒரு விறுவிறு பயங்கரத் தொடரைத் தந்துள்ளார். இம்முறை மோகனுக்கு நடந்த கதி என்ன? பக்கம் 14 ஐப் பாருங்கள்.
“சிந்திக்குமா முஸ்லீம் காங்கிரஸ்” கட்டுரை முஸ்லீம்களின் சமுதாய நிலை பற்றியும் அவர்களது அரசியல் தலைமைகளின் நடவடிக்கை பற்றியும் பேசுவதோடு இனி வரும் காலங்களில் முஸ்லீம் தலைமைகள் மக்களுக்காக செய்ய வேண்டியவற்றையும் கூறுகின்றது.

இம்முறை மருத்துவத்தில் டொக்டர் முருகானந்தன் கொலஸ்ட்ரோல் பிரச்சினையை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றிக் கூறுகிறார். வழமைப்போல இம்முறையும் “சட்டம் பேசுகிறது” பகுதியில் விவாகரத்தில் சட்டம் கொண்டுள்ள ஆதிக்கம் பற்றி சட்டத்தரணி விவேகானந்தன் எழுதியுள்ளார். பெறுத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடந்து முடிந்த 19 ஆவது உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் நடந்த சுவாரயங்களை விளையாட்டுப் பகுதியில் சீ.கே. மய+ரன் தொகுத்தளித்துள்ளார்.

தயாரிப்பு, இசையமைப்பு என புதிய அவதாரமெடுத்துள்ள நடிகர் கருணாஸின் “அம்பா சமுத்திரம் அம்பாணி” திரைப்படம் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம் இம்முறை சினிமா பக்கத்தில்.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்து தற்பொழுது மீளக்குடியமர்ந்துள்ள மாணவர்களின் கல்வி கற்றல் நடவடிக்கையில் ஏற்படும் பிரச்சினை பற்றி “வன்னி மாணவர்களின் இன்றைய நிலை” கட்டுரை விபரிக்கின்றது.

“நிலையான வாழ்வாதாரத்திற்காக ஏங்கும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள்” என்ற கட்டுரை யுத்தத்தால் கணவன்மார் இல்லாது துன்பப்படும் பெண்கள் பொருளாதார ரீதியாக தாங்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் பற்றி விபரிக்கின்றது.

இவற்றோடு கார்ட்டூன் இ அஷ்ரப் சிஹாப்தீனின் “அதற்குத்தக”, கோபு எழுதும் அரசியல் கட்டுரை, பரபரப்பாக பேசப்பட்ட செம்மொழி தமிழ் மாநாடு பற்றிய காத்திரமான விமர்சனம் , இலக்கியம் , பாலா சங்குபிள்ளையின் சிறுகதை, உளவியல் கட்டுரை, இவற்றோடு கவிதை, ஜோக் என இன்னும் பல சுவாரஷ்யமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இருக்கிறமின் 58 ஆவது இதழ்.
உடனே வாங்கிப் படியுங்கள். உங்கள் கருத்துக்களை ஏற்க கருத்துக்களம் தயாராக இருக்கிறது.