'இருக்கிறம்'

சாம்பலிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையாக இருக்கிறம் மீண்டும் பறக்கத் தொடங்கியிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களில் சஞ்சிகையை மாதமிருமுறை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதங்கள், பொருளாதாரத் தடைகள் என பல பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து பகீரத பிரயத்தனத்திற்கு மத்தியில் இருக்கிறம் வெளிவந்துகொண்டிருந்ததை யாவரும் அறிவர். அதிகரித்து வரும் செலவீனங்கள், விநியோகத்திலுள்ள ஆட்பல பற்றாக்குறை, சந்தைப்படுத்தலிலுள்ள குறைபாடுகள் என பல்வேறு நெருக்கடிகளுக்குள் இருக்கிறம் சிக்கித் திணறத்தொடங்கியதால் ஜனவரி மாதம் 64 ஆவது இதழுடன் தனது பயணத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. எனினும் இச்சஞ்சிகைக்காக இரவுபகல் கண்விழித்து அயராது பாடுபட்டுவரும் துடிப்புமிக்க இதழியல் துறைசார்ந்த இளைஞர் குழுவினருடன் பணியாற்றும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் மீண்டும் இருக்கிறம் சஞ்சிகையை கொண்டுவர பல முயற்சிகளையும் மேற்கொண்டனர். மனதில் துணிவும், நம்பிக்கையும், ஆதரவளிக்கும் வாசகர்களும் இருக்கிறமுடன் கூடவே இருந்ததால் மீண்டும் இருக்கிறம் தனது பயணத்தை வார இதழாக ஆரம்பித்து இருக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ்ச் சஞ்சிகை ஒன்றை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவது என்பது எந்தளவுக்கு சவாலானது என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக தமிழகத்திலிருந்து வெளிவரக் கூடிய சஞ்சிகைகளின் போட்டியைச் சமாளிக்க வேண்டும். அந்தளவு தூரத்திற்கு அதற்கான விடயப்பரப்போ, அச்சுத் தரமோ, வாசகர்களின் ஆதரவோ இலங்கையில் இல்லை. அதனால்தான் இலங்கையைப் பொறுத்தவரையில் நின்று போன சஞ்சிகைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. பற்றி எரியும் அன்றாடப் பிரச்சினைகள், தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாழ்வைப் புரட்டிப்போட்டு நிற்கும் சிக்கல்கள் போன்றவற்றையே பெரும்பாலும் உள்ளடக்கங்களின் பிரதான கருப்பொருளாகக் கொண்டு ~இருக்கிறம்’ வெளியாவதால் அது தமிழ் பேசும் மக்களின் உயிர்த்துடிப்பின் பிரதிபலிப்பாக நிற்கின்றது என்பது வெள்ளிடைமலை. ஏனைய சஞ்சிகைகள் இலக்கியத்தை முதற் பொருளாகப் பேச, ‘இருக்கிறம்| வெகுசன வாசிப்புக்குத் தீனிபோடும் பல்துறை சார்ந்த இதழாகத் தன்னை அடையாளப்படுத்தி நிற்கிறது. இலக்கியத் தரப்பை மட்டுமல்லாமல், சகலரையும் வாசிக்க வைக்கவேண்டுமென்பதே இதன் நோக்கம். ஆரோக்கியமான வாசிப்பு அனுபவத்தைத் தருவதுதான் ‘இருக்கிறம்’ பெற்றுள்ள வெற்றிக்குப் பிரதான காரணம். இவற்றுக்கும் மேலாக சமூக அவலங்களை பிரதேச மண்வாசனையோடு நகைச்சுவையாகத் தருவதில் ‘இருக்கிறம்’ ஒரு தனித்துவத்தைப் பெற்றிருக்கின்றது. கருத்தைக் கவரும் லாவகமான எழுத்து நடை, காத்திரமான கட்டுரைகள், நேர்த்தியான அச்சு, ஒழுங்கமைப்பான பக்க வடிவமைப்பு, கவர்ச்சியான கட்டமைப்பு, வண்ணப் பிரதிபலிப்பு, இதுவே “இருக்கிறம்”. அதென்ன “இருக்கிறம்” என்று இன்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். யுத்த அழிவுகளில் சிக்கி, ஆக்கிரமிப்பு, அழுத்தங்களில் துவண்டு, வாழ்வியல் சோகங்களில் மூழ்கி நலிவுற்றிருக்கும் எமது தமிழ்பேசும் மக்களையோ அல்லது புலம்பெயர் தமிழர்களையோ பார்த்து “எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “இருக்கிறம்” என விரக்தியாகப் பதில் சொல்வார்கள். ஆனால் நாங்களும் “இருக்கிறம்” என்ற அடையாளத்தோடு உயிர்த்துடிப்புள்ள சஞ்சிகையாக இருக்கிறம் நான்கு ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருக்கிறது. ‘ஏதோ இருக்கிறம்’, ‘எப்படியோ இருக்கிறம்’, ‘சும்மா இருக்கிறம்’, என்பவர்களுக்கிடையில் ‘இருக்கின்றவர்களுக்காய் இருக்கிறம்’ என்ற தற்துணிவுடன் இருக்கிறம் வெளிவந்து கொண்டிருக்கின்றது. உலகில் வெளிவந்து கொண்டிருக்கும் சஞ்சிகைகளோ நூல்களோ பெயர்ச்சொல்லில்தான் தமக்குரிய பெயரை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் ஈழத்தமிழர்களின் வாழ்வியலை வெளிக்காட்டுவதற்காய் வினைச்சொல்லிலே இருக்கிறம் தனது பெயரை வகுத்துக் கொண்டது. ஏனெனில் இன்று நாமெல்லாம் வினைகளாகத்தானே இருக்கிறோம். இருக்கிறமின் மகுட வாக்கியம் “ஒரு பொல்லாப்பும் இல்லை” என்ற யோகர் சுவாமிகளின் கூற்று. ‘ஒரு பொல்லாப்புமில்லை, எப்பவோ முடிந்த காரியம்..” என்றார் அந்த தேரடிச் சித்தர். உண்மைதான் ‘ஒரு பொல்லாப்பும் இல்லை| என்பதோடு, ‘இருக்கிறம்| தனது செயற்பாடுகளை வரையறுத்துக் கொள்ளாது எமது எதிர்காலம் குறித்து அறிவார்ந்த ஆய்வு முறைகளுக்கும் இடம் தருகின்றது. ஈழத்தமிழ்ச் சமூகம் தனது கலைந்து போன கனவுகளை நனவாக்குவதற்கு இந்த அணுகுமுறை அவசியமானதால் அதை நோக்கிய இருக்கிறமின் பயணம் மிகவும் துணிச்சலானது. ‘இருக்கிறம்’ என்ற சின்னத்தில் இரண்டு காகங்கள் ஏன் எதிரும்புதிருமாக ஒன்றையொன்று பார்த்தவண்ணம் உட்கார்ந்திருக்கின்றன? காகத்தை விட வேறு பறவைகள் சின்னங்களாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். எங்களுடைய நாட்டில் காகம்தான் எங்கும் காணப்படும் பறவை. சாதாரண பொது சனங்களை அது அடையாளப்படுத்துகிறது. காகம் எமது வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்புபட்டது. ஒரு இரையைக் கண்டால் தான் மட்டும் உண்ணாது தனது சகாக்களையும் அழைத்து பகுத்துண்ணும் பழக்கம் கொண்டது. சைவசமயத்தவர்கள் விரதம் அனுஷ்டிக்கும் போது உணவின் சிறுபகுதியை முதல் காகத்திற்கு வைத்தபின்னரே உண்ணத் தொடங்குவார்கள். இவை அனைத்தும் இன்று எமது சமூகத்திற்குத் தேவை. பண்பாடு, பழக்கவழக்கம் இரண்டும் இன்று ஐந்தறிவு ஜீவனாகிய காகத்திடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தியலின் அடிப்படையிலே காகம் இருக்கிறமின் சின்னமாகியது. பத்திரிகை உலகில் 80 வருடகால அனுபவத்தைக் கொண்ட வீரகேசரியின் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டுடன் ‘இருக்கிறம்’ சஞ்சிகை இன்று கைகோர்த்திருக்கின்றது. ‘இருக்கிறம்’ சஞ்சிகையின் பதிப்புரிமை மற்றும் விநியோக, விளம்பரப் பணிகளை வீரகேசரி நிறுவனம் பொறுப்பேற்றிருக்கிறது. இதுவரை மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த ‘இருக்கிறம்’ எதிர்வரும் ஏப்ரல் 4 முதல் வார இதழாக வீரகேசரி வெளியீட்டகத்தின் கீழ் வெளிவர இருப்பது வாசக நெஞ்சங்களின் அறிவுப்பசிக்கு தீனிபோடுவதாய் இருக்கும். இலங்கைத் தமிழ் சஞ்சிகை வரலாற்றிலே இது ஒரு மைல் கல் என்று சொல்லலாம். எதிர்காலத்தில் புதிய உத்வேகத்துடன் புதியபாதையில் பயணிக்கவிருக்கும் ‘இருக்கிறம்’ சஞ்சிகைக்கு வீரகேசரி சரியான ஒரு அடித்தளத்தையிட்டிருக்கிறது. வீரகேசரியின் ஆதரவுக்கு எமது நன்றிகள். வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ள சமூகமாக தமிழ்பேசும் மக்கள் இருப்பது இன்று பெரும் குறையாக இருக்கின்றது. இந்நிலையில் இவர்களை வாசிக்கத் தூண்டுவது ஒரு சஞ்சிகையின் பெரும் பணியாக இருக்கிறது. இலக்கியச் சிற்றேடுகள், ஜனரஞ்சக இதழ்கள் என்று வேறு திசைகளில் பயணித்த காலம் கரைந்து கொண்டு போகிறது. உயிர்மை, அம்ருதா, தீராநதி போன்றவை வாசகர்களுக்கு சீரியசான விடயங்களையும் எளிமையாகக் கொடுத்து வருகின்றன. ஆனால் ‘இருக்கிறம்’ அவற்றின் வழியில் கூடப் பயணிக்காது தனிவழியே செல்வது குறிப்பிடத்தக்கது. இன்று எமது மக்களைப் பொறுத்தவரையில் மாற்றம்தான் ஒரு முடிவாக இருக்கின்றது. மாற்றுக் கருத்துக்களும் மாற்றுச்சிந்தனைகளும் இன்று தமிழ் இளைஞர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. அந்தவகையில் அதற்கான சமூக சஞ்சிகையாக இருக்கிறமின் எழுச்சி எதிர்காலத்தில் வாசகர்கள் மத்தியில் புதிய திசையொன்றைச் சுட்டிக்காட்டி நிற்கும் என்பது திண்ணம்.

Monday, September 28, 2009

இலங்கையிலிருந்து ஒரு தமிழ் சஞ்சிகை

வெற்றிகரமான ஒரு தமிழ் சஞ்சிகையாக கொழும்பிலிருந்து மாதம் இருமுறை வெளிவந்து கொண்டிருக்கும் இருக்கிறம் தற்பொழுது வடக்கு, கிழக்கு, மலையக பிரதேசங்களிலும் தன்னை விஸ்தரித்துள்ளது. இதுவரை 39 இதழ்களைத்தாண்டி பயணித்துக் கொண்டிருக்கும் இருக்கிறம் சஞ்சிகையின் வெற்றிப்பயணத்தில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்.

உங்கள் தமிழில், உணர்வுள்ள நெஞ்சங்களின் உண்மைக் குரலாய், தடைகளைத் தாண்டி,உங்கள் கரங்களை நாடி, தரமான அம்சங்களுடன், " இருக்கிறம்" சஞ்சிகை.

Contact - T.P - 0113150836

Fax : 011 2585190
Email:irukiram@gmail.com
Office: ஈகோ பப்ளிசிங் ஹவுஸ் (பிறைவேற்) லிமிட்டட்
03, டொரிங்டன் அவன்யு, கொழும்பு - 07






2 comments:

  1. ஆசிரியரே........
    சொன்னதெல்லாம் சரிதான் மூன்று இடத்தில் பிழை விட்டுவிட்டீர்கள்.....

    1)//வெற்றிகரமான ஒரு தமிழ் சஞ்சிகையாக.....//
    2)//வெற்றிப்பயணத்தில் நீங்களும் இணைந்துகொள்ளுங்கள்.//
    3)//தரமான அம்சங்களுடன், " இருக்கிறம்" சஞ்சிகை.//

    இந்த மூன்று இடதிலும் நீங்கள் முடிந்த அளவு பொய் சொல்லி விட்டீர்கள்.

    ReplyDelete
  2. எழுதியவன் :- ஜென்சி + SP.சைலஜாவின் ரசிகன் ஆர். சிவபாலன்.
    மெலொடி குயீன் சோலைக் குயில் .SP.சைலஜா + ஜென்சி
    இசைஞானி இளையராஜாவின் இசைமாலையில் S.P.ஷைலஜா, ஜென்சி என்ற பாடகிகள் இரு வேறு நிறம், மனம் கொண்டபூக்கள்..... , இவர்களின் மிருதுவான குரல்களில் ஒரு சிறு குழைந்தையின் கொஞ்சல் அல்லது குழையல் இழையோடும்.
    சிறு வயதிலேயே பாட வந்து விட்ட SP. சைலஜா +., ஜென்சி ஆகியோரது இனிமையான குரல்கள் முற்றிலும் மற்ற பாடகிகளிடமிருந்து மாறுபட்டு இருக்கிறது. ஆனால் இவர்களின் குரல் இவர்களுக்குள் ஏதோ ஒரு ஒற்றுமையை கொண்டிருக்கிறது.... இதை இளையராஜா வும் நன்கு அறிந்து இருவரையும் அதற்கேற்ப பாடவைதுத்துள்ளார்.
    SP. சைலஜா +ஜென்சி ஆகியோர் சம வயதுடைய பாடகிகள் இவர்களை ஏக காலத்தில் தமிழில் இளையராஜாவே அறிமுகப்படுத்தினார்.- 80-களில்....இனிமை... இந்த இரு குயில்களின் குரலும் வானொலிகளில் ஒலிக்காத நாளில்லை எனலாம் .

    ஜென்சி,+ SP.சைலஜா, ஆகிய இருவரினதும் சில பாடல்ளை நேரடியாக வீட்டில் கேட்காமல் எங்கோ வெகு தூரத்தில் காற்றில் மிதந்து வரும் போது கேட்டால் அள்ளிக்கொண்டுப் போகும். ஜென்சி,+ SP.சைலஜா ஆகிய இருவரும் சேர்ந்து பாடிய ”ஆயிரம் மலர்களே மலருங்கள்”……… பாடல் ஒரு உதாரணம். அதே மாதிரி
    ஜென்சி பாடிய...என் வானிலே ஒரே வெண்ணிலா ......... மற்றும் SP. ஷைலஜா பாடிய ....மலர்களில் ஆடும் இளமை புதுமையே ...................போன்ற பாடல்களுடன்
    ஜென்சி பாடிய இதயம் போகுதே……… ……………….
    SP சைலஜா பாடிய ராசாவே உன்னை நான் என்னிதான் …………….. போன்ற பாடல்கள் தூரத்தில் காற்றில் மிதந்து வரும் போது கேட்டால் உள்ளத்தை நெகிழ வைக்கும் அற்புதமான இசையில். இவர்கள் இருவரின் குரல்களில் வித்தியாசமான ரசனை உண்டு இளையராஜாவை பொறுத்தவரை இவர்கள் இருவருமே ஏற்றதாழ் வில்லாத பாடகிகள் S.P.ஷைலஜா,+ ஜென்சி ஆகியோரது கீச்சு குரல் 80 -களில் நம்மையெல்லாம் கிறங்கவைத்திருந்ததை மறக்க முடியாதது. இன்றும் ஆயிரம் ஆயிரம் நினைவுகளை சுமந்து கொண்டிருக்கிறது. இவர்களின் பாடல்கள் அத்தனையும் பொக்கிசங்கள்...
    80 - களில் இளையராஜா இசையில் சில மறக்க முடியாத பாடல்களை தந்த. SP.சைலஜா, ஜென்சி. இருவரினதும் இன்னொரு ஒற்றுமை இருவரும் சம வயதுடையவர்கள, அன்றும் வானொலியில் ஒரு ஜென்சி யின் பாடல் ஒலிப்பரப்பினால் அடுத்து SP.சைலஜாவினது பாடல் ஒலிப்பரப்பாகும். இன்றும் 80-களில் பாடல் ஒலிப்பரப்பினால் இவ்வாறுதான் , அடுத்து சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் SP.சைலஜாவின் பேட்டி இடம் பெற்று அடுத்த வாரமே ஜென்சியின் பேட்டியும் இடம் பெற்றது . பொதுவாக சைலஜா என்று சொன்னவுடன் அடுத்து ஜென்சி தான் எல்லோர் மனதிலும் தோன்றும் வானொலியில் சைலஜா அல்லது ஜென்சி யின் பாடல் ஒலிப்பரப்பும் பொழுது .ஒரு சிலர் ஜென்சி பாடிய பாடலை இது சைலஜா பாடியதாகவும் சைலஜா பாடிய பாடலை இது ஜென்சி பாடியதாகவும் நினைப்பதுண்டு ஆனால் பாடலின் முடிவில் வானொலியில் பாடகியின் பெயர் சொல்லும் பொழுது தான் இது சைலஜா இது ஜென்சி யின் குரல் என்று அறிந்து விடுவார்கள் மென்மையான அப்பாவித்தனமான ஒரு வசீகரம் சைலஜா, ஜென்சி யின் குரலில் காணலாம்

    சமீபத்தில் நண்பிகளான S P .சைலஜா வும் ஜென்சி யும் இனைந்து "இரு பறவைகள்” எனும் இசை நிகழ்ச்சியில் கலந்து ..ஆயிரம் மலர்களே................என்று தொடங்கி அவர்களது இருவரினதும் இனிய மறக்கமுடியாத 80-களின் பிரபலமான பாடல்களை இனிய குரலில் இசைத்து ரசிகர்களை பரவசப்படுத்தினார்கள் எனபது குறிபிடத்தக்கது .அடுத்து ...............

    ReplyDelete